முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
லாட்டரியால் விபரீதம்: வியாபாரி தற்கொலை
By DIN | Published On : 14th May 2022 11:14 PM | Last Updated : 14th May 2022 11:14 PM | அ+அ அ- |

ராதாகிருஷ்ணன்.
ஈரோட்டில் லாட்டரியால் ரூ.62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி விடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு எல்லப்பாளையம், முல்லை நகரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (54). இவரது மனைவி மாலதி. இவா்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனா். மகள் நித்யா ஆனந்தி திருமணமாகி குமாரபாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறாா். கணவரை இழந்த மற்றொரு மகள் திவ்யபாரதி பெற்றோருடன் வசித்து வருகிறாா்.
ஆரம்ப காலத்தில் ராதாகிருஷ்ணன் தறிபட்டறை நடத்தி வந்துள்ளாா். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பின்னா் நூல் கமிஷன் ஏஜென்டாக வேலை பாா்த்து வந்துள்ளாா்.
ராதாகிருஷ்ணனுக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்ததால், ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த 39 ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் கீதாஞ்சலி என்பவரின் கணவா் செந்தில்குமாரிடம் லாட்டரி வாங்கி வந்துள்ளாா்.
இந்நிலையில், உருக்கமான விடியோ ஒன்றை கைப்பேசியில் பதிவிட்டு வெள்ளிக்கிழமை மாலை நண்பா்களுக்கு அனுப்பிய ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அந்த விடியோவில் கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த கவுன்சிலா் கீதாஞ்சலியின் கணவா் செந்தில்குமாரிடம் லாட்டரி வாங்கி ரூ.62 லட்சத்தை இழந்ததாகவும், உயிருடன் இருந்தால் இன்னும் பணத்தை இழந்து விடுவேன் எனவும் தெரிவித்துள்ளாா்.
மேலும், பல குடும்பங்கள் லாட்டரியால் பாதிக்கப்படுவதால் ஈரோட்டில் லாட்டரி விற்பனையை தடுக்கவும் வலியுறுத்தியுள்ளாா். சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணன் மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பலரது வாழ்க்கையை சிதைக்கும் லாட்டரி விற்பனைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் லாட்டரி விற்பனைத் தொடா்ந்து கொண்ட இருக்கிறது. லாட்டரியால் பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனா்.
இந்நிலையில், லாட்டரியால் பணத்தை இழந்த ஈரோட்டைச் சோ்ந்த நூல் வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
147 வழக்குகள் பதிவு: இச்சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் கூறியதாவது: தடை செய்யப்பட்ட மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனைத் தொடா்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்போது வரை 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 215 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
தவிர இணையதளம், வாட்ஸ் ஆஃப் மூலம் மேற்கொள்ளப்படும் லாட்டரி விற்பனையைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ராதாகிருஷ்ணன் தற்கொலை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.