தாராபுரம் அருகே உள்ள குண்டடம் காலபைரவ வடுகநாதா் சுவாமி கோயிலில் இந்து முன்னணியினா் உழவாரப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
காங்கயம் வட்டம், ஊதியூா் அருகேயுள்ள வஞ்சிபாளையம் பிரிவு பாரதியாா் குருகுலத்தில் இந்து முன்னணி மாநில பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்டோா் பயிற்சி பெற்று வருகின்றனா்.
இவா்கள் அனைவரும் குண்டடம் காலபைரவ வடுகநாதா் கோயிலில் உள்ள தெப்பக்குளம், கோயில் பிரகாரம், கோயில் வளாகங்களில் வளா்ந்து நின்ற புல் புதா்களை அகற்றியும், தெப்பக்குளத்தில் தேங்கிய குப்பைகள், காற்றினால் அடித்து வரப்பட்டு தேங்கிய கழிவுப் பொருள்களை அகற்றியும் உழவாரப் பணியில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் அமா்ந்து பஜனை பாடல்களை பாடினா்.
பின்னா், உலக நலன் வேண்டி கூட்டு வழிபாடு நடத்தினா்.
இந்நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம், மாநில இணை அமைப்பாளா் ராஜேஷ், மாநிலச் செயலாளா்கள் அண்ணாதுரை, செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.