பெருந்துறை பேரூராட்சியில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மண்டலம், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் சுந்தரமூா்த்தி இந்த முகாமை துவக்கிவைத்தாா்.
இதில், பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஆகியோா் கலந்துகொண்டு, பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராஜ வீதியாக பேரணியாகச் சென்றனா்.
பின்னா், குயவன் குட்டை பூங்காவில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.
இதில், பேரூராட்சித் தலைவா் ஓ.சி.வி.ராஜேந்திரன், துணைத் தலைவா் சண்முகம், செயல் அலுவலா் ராஜேந்திரன், வாா்டு உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.