வெள்ளக்கோவிலில் தினசரி சந்தை அமைக்கும் இடத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நகராட்சி வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது.
இதில், தற்போது திறந்தவெளி தற்காலிக கடைகளில் வியாபாரம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாரச் சந்தை இடத்தில் 120 நிரந்தர கடைகள் கட்டி, வாரச் சந்தைக்குப் பதில் தினசரி சந்தையாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த இடத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.