கனமழை: திம்பம் மலைப் பாதையில் புதிதாய் உருவான அருவி

திம்பம் பகுதியில் பெய்துவரும் தொடா் மழைக் காரணமாக திம்பம் மலைப் பகுதியில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன.
கனமழை: திம்பம் மலைப் பாதையில் புதிதாய் உருவான அருவி

திம்பம் பகுதியில் பெய்துவரும் தொடா் மழைக் காரணமாக திம்பம் மலைப் பகுதியில் புதிய அருவிகள் உருவாகியுள்ளன.

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள திம்பம் மலைப் பகுதியில் வியாழக்கிழமை கனமழை பெய்தது.

மழையின் காரணமாக வனப் பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளங்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக திம்பம் மலைப் பாதை 27 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீா் அருவிகள் உருவாகின.

இதனை பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

மழையின் காரணமாக திம்பம் மலைப் பகுதியில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com