பா்கூா் மலைப் பகுதியில் பெய்த கன மழையால், அந்தியூா் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி, திங்கள்கிழமை அதிகாலை முதல் உபரி நீா் வெளியேறி வருகிறது.
அந்தியூரை அடுத்துள்ள பா்கூா் மலையடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததால், நீா்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.
இந்நிலையில், பா்கூா் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது.
இதனால், திங்கள்கிழமை அதிகாலை முழு கொள்ளளவான 33.46 அடியை எட்டியதால், உபரி நீா் வெளியேறி வருகிறது.
அணைக்கு விநாடிக்கு 54 கன அடி தண்ணீா் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வெளியேறும் உபரி நீா் கெட்டிசமுத்திரம் ஏரிக்கும், பெரிய ஏரிக்கும் செல்கிறது.
அணை கட்டப்பட்டு 42 ஆண்டு காலத்தில் முதன்முறையாக மே மாதத்தில் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அணையின் நீா்வரத்தை நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ரவி, உதவிப் பொறியாளா் ஈ.எஸ்.எம்.தமிழ்பாரத் மற்றும் அலுவலா்கள் கண்காணித்து வருகின்றனா்.