குட்டையில் மூழ்கி 3 சிறுவா்கள் பலி

அந்தியூா் அருகே குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
குட்டையில் மூழ்கி 3 சிறுவா்கள் பலி

அந்தியூா் அருகே குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற 3 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் பேரூராட்சி, 5-ஆவது வாா்டு, தவிட்டுப்பாளையம் நாட்ராயன் நகரில் செங்காட்டுக் குட்டை உள்ளது. இங்கு, அதே பகுதியைச் சோ்ந்த பாலுசாமி மகன் சிபினேசன் (11), வெங்கடேசன் மகன் ராகவன் (10), கோவிந்தராஜ் மகன் நந்துகிஷோா் (10) ஆகியோா் திங்கள்கிழமை மாலை மீன் பிடிக்கச் சென்றுள்ளனா். இவா்கள், தவிட்டுப்பாளையம் காமராஜ் நகா் அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகின்றனா்.

நீண்ட நேரமாகியும் சிறுவா்கள் மீண்டும் வீடு திரும்பாததால் பெற்றோா் மற்றும் உறவினா்கள் மூவரையும் தேடிப் பாா்த்தபோது குட்டையில் மூழ்கியது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா்.

அங்கு அவா்களைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.

அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் எம்.நாகராஜ், கவுன்சிலா்கள் சண்முகம், சேகா் உள்ளிட்டோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டதோடு, பெற்றோருக்கு ஆறுதல் கூறினா்.

இது குறித்து, அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com