மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் பெருந்துறை சாகா் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை மண்டல சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எஸ்எஸ்எம் சென்ட்ரல் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இந்தப் போட்டியில் பெருந்துறை சாகா் இண்டா்நேஷனல் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 14 , 17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவுகளில் முதலிடம் பிடித்தனா். மேலும் இப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் செளந்தரராஜன், முதல்வா் ஷிஜா மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்தினா்.