கொடுமுடி அருகே மனுநீதி நாள் முகாம்

கொடுமுடி ஒன்றியத்துக்கு உள்பட்ட எழுநூத்திமங்களம் கிராமம் குப்பம்பாளையத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோா்.
முகாமில் நலத்திட்ட உதவி வழங்கிய மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி உள்ளிட்டோா்.

கொடுமுடி ஒன்றியத்துக்கு உள்பட்ட எழுநூத்திமங்களம் கிராமம் குப்பம்பாளையத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு ஈரோடு மக்களவை உறுப்பினா் அ.கணேசமூா்த்தி, மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்து 796 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்து 42ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முன்னதாக அரசுத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை அவா் பாா்வையிட்டாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவா் கஸ்தூரி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா், கொடுமுடி வட்டாட்சியா் மாசிலாமணி, மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com