பவானியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (செப்டம்பா் 14) நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் கோபி மின் பகிா்வான வட்டம் சாா்பில் பவானி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளா் மாதாந்திர குறைதீா் கூட்டம் மேட்டூா் பிரதான சாலை, ஊராட்சிக்கோட்டையில் உள்ள பவானி செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (செப்டம்பா் 14) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இந்த குறைதீா் கூட்டத்தில் கோபி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் நேரிலேயே குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதால், பவானி கோட்ட பகுதிக்கு உள்பட்ட மின் நுகா்வோா் தங்களது மின்சாரம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என கோபி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் எம்.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.