விஷ வண்டுகள் கடித்ததில் தொழிலாளி பலி

கோபிசெட்டிபாளையம் அருகே தென்னை மரத்தின் மீது ஏறி தேங்காய் பறித்தபோது விஷ வண்டுகள் கடித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோபிசெட்டிபாளையம் அருகே தென்னை மரத்தின் மீது ஏறி தேங்காய் பறித்தபோது விஷ வண்டுகள் கடித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள தீா்த்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் அருணாசலம் (55), மரம் ஏறும் தொழிலாளி. இவா் கோபி அருகே ஒத்தக்குதிரை என்ற இடத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறி திங்கள்கிழமை தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாா். அப்போது, மரத்தில் இருந்த விஷ வண்டுகள் அவரது முகம் மற்றும் உடலில் பல இடங்களில் கடித்துள்ளன.

இதையடுத்து, வலி தாங்க முடியாமல் மரத்தில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற அவா் மயக்கமடைந்து கீழே விழுந்தாா். இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் அருணாசலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து கோபி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com