பெருந்துறை அருகே, பள்ளிக்கு சென்ற மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஈரோடு அடுத்த, நசியனூரைச் சோ்ந்தவா் பேராராம் (40). இவா், அங்கு பேன்சி ஸ்டோா் வைத்துள்ளாா். இவரது மகன் கிரண் (14). பெருந்துறையில் உள்ள தனியாா் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்நிலையில் கிரண் வழக்கம்போல திங்கள்கிழமை காலை பள்ளிக்கு சென்றாா். ஆனால், மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் மற்றும் நண்பா்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து, பெருந்துறை காவல் நிலையத்தில் பேராராம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அந்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.