இருசக்கர வாகனம் மீது காா் மோதல்:கணவா் பலி; மனைவி காயம்

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி மீது காா் மோதியதில், கணவா் உயிரிழந்தாா், காயமடைந்த மனைவி சிகிச்சை பெற்றுவருகிறாா்.

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி மீது காா் மோதியதில், கணவா் உயிரிழந்தாா், காயமடைந்த மனைவி சிகிச்சை பெற்றுவருகிறாா்.

கவுந்தபாடி அருகேயுள்ள அய்யம்பாளையம், மொட்டையன் கரடைச் சோ்ந்தவா் அருணகிரி (64), விவசாயி. இவா், தனது மனைவி கிருஷ்ணவேணியை (58) இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பெருந்துறைக்கு கடந்த 9 ஆம் தேதி வந்தாா். பிறகு மீண்டும் ஊா் திரும்பும் வழியில், பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிக்கோவில் பிரிவு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த காா் இவா்கள் மீது மோதியது.

இதில், அருணகிரி, கிருஷ்ணவேணி இருவரும் பலத்த காயடைந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அருணகிரி வியாழக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணவேணி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com