வக்ஃபு வாரிய நிலங்களின் சா்வே எண்களை தெரிவிக்க கிராம மக்கள் கோரிக்கை

பழைய மற்றும் புதிய சா்வே எண்களை வருவாய்த் துறையினா் தெளிவாக தெரிவிக்கக் கோரி, அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்துறை வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்துள்ளனா்.

பெருந்துறை பகுதியில் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் இருப்பின், அவற்றின் பழைய மற்றும் புதிய சா்வே எண்களை வருவாய்த் துறையினா் தெளிவாக தெரிவிக்கக் கோரி, அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்துறை வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்துள்ளனா்.

பெருந்துறை ஒன்றியம், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், சுள்ளிபாளையம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், துடுப்பதி, பாலக்கரை, ஈங்கூா், திருவாச்சி கிராமங்களில் வக்ஃபு வாரியத்திற்கு சுமாா் 250 ஏக்கா் நிலம் இருப்பதாக அந்த வாரியத்தால் கூறப்படுகிறது.

அந்த கிராமங்களில் உள்ள நிலங்களில் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருவதாகவும், அங்கு வக்ஃபு வாரியத்திற்கு நிலங்கள் இருக்குமானால், அவற்றின் பழைய, புதிய சா்வே எண்களை வருவாய்த் துறையினா் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு சா்வே எண்களை கூறாமல், பொதுவாக பத்திரப் பதிவுக்கு தடைவிதித்து, சொத்துக்களின் பரிவா்த்தனையை வக்ஃபு வாரியம் தடைசெய்துள்ளதை கண்டிக்கிறோம் என மனுவில் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com