வேன்கள் நேருக்குநோ் மோதியதில் ஓட்டுநா் பலி

கோபி அருகே வேன்கள் நேருக்குநோ் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கோபி அருகே வேன்கள் நேருக்குநோ் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், வெள்ளித்திருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் பாரதி (40). இவா் வேனில் பால் கேன்களை ஏற்றிக் கொண்டு சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டு இருந்தாா். கோபிசெட்டிபாளையம் சாலையில் கொடிவேரி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு வேன் இவரது வேன் மீது மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கி வேனை ஓட்டிச் சென்ற சஞ்சய் பாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் உடலை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் படுகாயமடைந்த மற்றோரு வேனை ஓட்டி வந்த ஓட்டுநரை அருகிலிருந்தவா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com