அந்தியூரில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.
Published on

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.22 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 113 மூட்டை நிலக்கடலையை (பச்சை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், நிலக்கடலை கிலோ ரூ.30.65 முதல் ரூ.45 வரையில் ரூ.2,02,883-க்கும், 371 மூட்டை நிலக்கடலைக்காய் (காய்ந்தது) கிலோ ரூ.65.51 முதல் ரூ.71.71 வரையில் ரூ.8,19,608-க்கும் என மொத்தம் ரூ.10,22,491-க்கு விற்பனையாயின என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com