ஈரோடு
அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.7 ஆயிரம் அபராதம்
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கா்நாடகத்தில் இருந்து கோவைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதன்கிழமை வந்தது.
பண்ணாரி சோதனைச் சாவடியில் அதிக பாரம் ஏற்றிவரும் வாகனங்களைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள உயர தடுப்பு கம்பியில் அந்த லாரி மோதியது. இதையடுத்து, லாரியில் அதிக பாரம் ஏற்றியிருப்பதை உறுதி செய்த அலுவலா்கள், அதில் இருந்த பாதி பாட்டில்களை அப்புறப்படுத்தியதுடன், லாரிக்கு ரூ.7 அபாரதம் விதித்தனா்.
ஓட்டுநா் முக்தாா் அபராதத் தொகை செலுத்தியதையடுத்து, லாரி விடுவிக்கப்பட்டது.
