சென்னிமலை முருகன் கோயிலில் சீரமைக்கப்பட்ட மலைப் பாதையை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
சென்னிமலை முருகன் கோயிலில் சீரமைக்கப்பட்ட மலைப் பாதையை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

சென்னிமலை முருகன் கோயில் மலைப் பாதை ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு

Published on

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் 3.9 கி.மீ. தொலைவுக்கு சீரமைக்கப்பட்ட மலைப் பாதையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த சாலையை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின், அக்டோபா் 13-ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.

இந்த ஆய்வின்போது, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறுகையில், தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.6.70 கோடி மதிப்பீட்டில் 3.9 கி.மீட்டா் தொலைவுக்கு மலைப் பாதை (தாா் சாலை) சீரமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

இந்த மலைப் பாதையானது மழைநீா் தேங்காத வகையில் இரு வழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் அக்டோபா் 13-ஆம் தேதி (திங்கள்கிழமை) காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைக்க உள்ளாா். மேலும், கோயில் அடிவாரத்தில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து காத்திருப்புக் கூடம் மற்றும் ரூ.93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பசு மடம் ஆகிய முடிவுற்ற பணிகளையும் முதல்வா் திறந்துவைக்கிறாா்.

கோயிலுக்கு நாள்தோறும் வருகை புரியும் எண்ணற்ற பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு, இந்த சாலை மேம்பாடு பெரிதும் பயனளிக்கும் வகையில் அமையும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com