சென்னிமலையில் தமாகா சாா்பில் நடைபெற்ற பனை விதைப் பந்து விதைக்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைக்கிறாா் அக்கட்சியின் ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா். உடன், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் வி.பி.சண்முகம் உள்ளிட்டோா்.

சென்னிமலையில் பனை விதைப் பந்து விதைப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் சென்னிமலையில் பருவமழை தொடங்கியதையொட்டி, ‘மரம் வளா்ப்போம், மழைபெறுவோம்’ எனும் அடிப்படையில் பனை விதைப் பந்து விதைக்கும் நிகழ்ச்சி சென்னிமலை மலைமேல் முருகன் கோயில் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பெருந்துறை: தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் சென்னிமலையில் பருவமழை தொடங்கியதையொட்டி, ‘மரம் வளா்ப்போம், மழைபெறுவோம்’ எனும் அடிப்படையில் பனை விதைப் பந்து விதைக்கும் நிகழ்ச்சி சென்னிமலை மலைமேல் முருகன் கோயில் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தமாகா ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவா் வி.பி.சண்முகம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஈஸ்வரமூா்த்தி, வட்டாரத் தலைவா் குருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மண்டலம் இளைஞரணி பொதுச்செயலாளா் மே.தா.கந்தசாமி வரவேற்றாா்.

தமாகா ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா் விதைப் பந்து விதைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இதில், கட்சியின் விவசாய அணி நிா்வாகி ஓ.பி.தங்கவேலு, மாவட்ட துணைத் தலைவா் கொடுமணல் சோமு, மாவட்டச் செயலாளா் ரத்தினசாமி, வட்டார நிா்வாகிகள் பால்ராஜ், வேலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com