புகையிலைப் பொருள் விற்பனை: பெட்டிக்கடைக்காரா் கைது

பெருந்துறை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

பெருந்துறை அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தக் கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு விற்பனைக்காக 1 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடை உரிமையாளரான ராமசாமி (27) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com