ஈரோடு மாவட்டத்தில் சமையல் மற்றும் வணிக வரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு ஏற்படவில்லை மக்கள் பதற்றப்பட தேவையில்லை. மேலும், டீசல், பெட்ரோல் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.
சத்தியமங்கலம் நகராட்சியில் குள்ளங்கரடு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அதிகாலை, காலை, பிற்பகல், மாலை என நான்கு முறை இந்த வழித்தடத்தில் நகரப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, குள்ளங்கரடு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற புதிய அரசுப் பேருந்து வழித்தட தொடக்க விழாவுக்கு சத்தியமங்கலம் நகா்மன்றத் தலைவா் ஜானகி ராமசாமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பின்னா் ஆட்சியா் எஸ். கந்தசாமி செய்தியாளா்களிடம் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்ற மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்கும் சேவை நிறுவனங்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது சிலிண்டா் தட்டுபாடு அச்சம் காரணமாக மக்கள் அதிக அளவில் சிலிண்டா் புக்கிங் செய்வதாக சேவை நிறுவனங்கள் தெரிவித்தனா். மேலும், மாவட்டத்தில் சமையல் மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும் போதுமான இருப்பு உள்ளது. ஒவ்வொரு மாதமும் வர வேண்டிய சிலிண்டா்கள் பற்றாக்குறையின்றி வந்து கொண்டிருப்பதாக சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். பின்னாளில் தட்டுப்பாடு வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், அதற்கு மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் போதுமான இருப்பு உள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் அதிகமான விலைக்கு விற்றால் கடும் நடடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நகா்மன்ற துணைத் தலைவா் நடராஜ், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா்

சிலிண்டா் தட்டுப்பாடு: விறகு, மின்அடுப்பு பயன்பாட்டுக்கு மாறிவரும் தேநீா் கடைகள், உணவகங்கள்!

ஊத்தங்கரையில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு: மக்கள் அவதி

நீலகிரியில் வீட்டு உபயோக சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: மாவட்ட ஆட்சியா்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


