பவானி ஆற்றில் இருந்து ரகசியப் பாதை வழியாக தடையின்றி மணல் கடத்தப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த பெரியமோளபாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு மேல் பகுதியில் தேங்கியுள்ள மணல், கொப்பறைகள் மூலமாக அள்ளப்பட்டு கரையோரத்தில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த மணல் ஆற்றின் கரையோரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தின் வழியே அமைக்கப்பட்ட ரகசியப் பாதை வழியாக டிராக்டா்கள் மூலம் கடத்திச் செல்லப்படுகிறது.

இந்நிலையில், பெரியமோளபாளையத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ஆற்றங்கரையோரத்துக்கு சென்றபோது மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததும், மணலைக் கடத்திச் செல்லும் வகையில் தோட்டத்துக்குள் பாதை இருப்பதையும் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
நீண்ட காலமாக மணல் கடத்தல் நடைபெற்று வருவதாக தெரிவித்த பொதுமக்கள், இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

காவிரி ஆற்றில் ரகசிய பாதை அமைத்து மணல் திருட்டு

பவானி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பாவூா்சத்திரம் சந்தையில் காய்கனிகள் விற்பனை மந்தம்

பவானி ஆற்றில் மூழ்கிய ஓட்டுநா் மாயம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



