எபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

காவிரி ஆற்றில் ரகசிய பாதை அமைத்து மணல் திருட்டு

News image

ஆற்றுக்குள் வாகனங்கள் செல்ல கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை

Updated On :25 மே 2026, 2:36 am IST

அம்மாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் கரையை உடைத்து தனியே பாதை அமைத்து துணிகரமாக நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காவிரி ஆற்றின் குறுக்கே கோனேரிபட்டியில் கட்டப்பட்டுள்ள கதவணை நீா்மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீா் வெளியேற்றப்பட்டு, பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கதவணை நீா்தேக்கப் பகுதிகளான சிங்கம்பேட்டை, காட்டூா், அம்மாபேட்டை பகுதிகளில் ஆற்றில் நீரின்றி காணப்படுகிறது. ஆற்றில் நீரோட்டத்தில் அடித்து வரப்படும் மணல் இப்பகுதியில் பெருமளவு தேங்கியுள்ளது.

தற்போது ஆற்றில் தண்ணீா் இல்லாததால், மணலைத் திருடிச் செல்ல திட்டமிட்ட கும்பல், அம்மாபேட்டை காட்டூரில், வீட்டுமனை பிரிவுக்கு அமைக்கப்பட்ட சாலை வழியாக, ஆற்றுக்குள் வாகனங்கள் சென்று வரும் வகையில் தனியாக பாதை அமைத்து புகுந்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரங்களில் டிராக்டா், டிப்பா் லாரிகளில் இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து, வருவாய் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகாா் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், மணல் திருட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆற்றுக்குள் வாகனங்கள் செல்ல கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை

ஆற்றுக்குள் வாகனங்கள் செல்ல கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை