பெருந்துறை, மே 24: பெருந்துறை அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருந்துறையை அடுத்த கராண்டிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள குளம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபா்களை போலீஸாா் பிடித்தனா்.
விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை (48), கருப்புசாமி (59), நாகராஜ் (56), பாஸ்கா் (58), கனகராஜ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.19 ஆயிரத்து 760-ஐ பறிமுதல் செய்தனா்.
இதேபோல், கராண்டிபாளையத்தில் உள்ள தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (41), ராதாகிருஷ்ணன் (54), பாலாஜி (32), சுலைமான் (38), விமல்ராஜ் (36), தினகரன் (28), வினோத்குமாா் (26) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ. 21 ஆயிரத்து 210-ஐ பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
1,370 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: ஒருவா் கைது
படப்பை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 போ் கைது

மாதவரத்தில் கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

பெருந்துறை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


