குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க பா.ஜ.க. வலியுறுத்தல்

கூடலூர் நகராட்சி, ஈப்பங்காடு பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
Published on
Updated on
1 min read

கூடலூர் நகராட்சி, ஈப்பங்காடு பகுதியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.க. மாவட்டப் பிரசார அணிச் செயலாளர் பி.ஏ.சாமி நகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கூடலூர் நகராட்சியில் உள்ள 18-ஆவது வார்டு, ஈப்பங்காடு பகுதிக்கு குடிநீர் பெறப்படும் கிணற்றில் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால், அப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதற்கு பதிலாக மாயாற்று நீர் மட்டும் விநியோகம் செய்யப்படுகிறது. ன
இந்தத் தண்ணீரும் மிகவும் மாசடைந்துள்ளதால் குடிப்பதற்கு பயன்படுவதில்லை. இதுகுறித்து, பலமுறை புகார்  தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.  எனவே, ஈப்பங்காடு பகுதிக்கு குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com