கூடலூரை அடுத்துள்ள தேவாலாவில் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சக்கீர் தலைமை வகித்தார்.
இதில், பொதுப் பிரச்னைகள் மற்றும் சட்டப் பேரவையில் நிலவும் நிலப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பொருளாளர் லோகேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். தாலூகா கமிட்டி தலைவர் தாமஸ், செயலாளர் ரசாக் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.
அதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் செயலாளர் சசிகுமார், துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் கலந்துகொண்டனர்.