நஞ்சநாடு அரசுப் பள்ளியில் வீரவணக்க நாள்

மஞ்சூர் அருகேயுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்தல் காவல் நிலையத்தின் சார்பில் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

மஞ்சூர் அருகேயுள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் காந்தல் காவல் நிலையத்தின் சார்பில் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
  இதற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஆய்வாளர் விவேகானந்த், உதவி ஆய்வாளர்கள் ராஜ், ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பள்ளி அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும், 10, 11, 12ஆம் வகுப்பில் காலாண்டுத் தேர்வில் முதலிடம் பிடித்த  ஹர்ஷத், சினேகா, ஜெயஸ்ரீ ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது.  முன்னதாக, முதுநிலை ஆசிரியை நிர்மல்ராஜ் வரவேற்றார்.  என்சிசி அலுவலர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com