மணியட்டி சாலையை  சீரமைக்கக் கோரிக்கை

மஞ்சூர் அருகே தங்காடு- மணியட்டி சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மஞ்சூர் அருகே தங்காடு- மணியட்டி சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மஞ்சூர் அருகே எடக்காடு கிராமம் உள்ளது. இக்கிராமத்தையொட்டி கன்னேரி, மந்தனை, மணியட்டி, மீக்கேரி, தங்காடு, ஓரநள்ளி உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன.  தங்காடு பகுதியில் இருந்து மணியட்டி வரையிலான சாலை பழுதடைந்து பல ஆண்டுகளாகியும்கூட சீரமைக்கப்படவில்லை. சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும்குழியுமாகக் காணப்படுகிறது.  இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மழைக்காலத்தில் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கிவிடுகிறது.
இதனால், பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே,  இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என மந்தனை உழவர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com