உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 
துணை ஆய்வுக்குழு அலுவலர் தேவிபாலா தலைமையில் நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ. 2 லட்சத்து 4 ஆயிரத்து 980 கைப்பற்றப்பட்டது. 
மேலும் இச்சோதனையில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சத்தியகுமார், இடைதரகர்களான குமார், சக்கரய்யா, பாபு, பிரகாஷ், ரவி, ஜெயகரன் ஆகியோரிடமிருந்து இந்தத் தொகை கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com