முதுமலைப் புலிகள் காப்பகத்தில் மோப்ப நாய் மூலம் வாகனச் சோதனை செவ்வாய்க்கிழமை துவங்கப்பட்டது.
முதுமலைப் புலிகள் காப்பகத்தில் வனப் பொருள்கள் கடத்துவதை கண்டுபிடிக்க மோப்ப நாயை முதல்முறையாக வாகனச் சோதனையில் வனத் துறையினர் ஈடுபடுத்தியுள்ளனர். தொரப்பள்ளி வனத் துறை சோதனைச் சாவடியில் வாகனங்களை சோதனையிடுவதற்கு மோப்ப நாய் ஆபர் ஈடுபடுத்தப்பட்டது. தேவைப்படும்போது மட்டும் மோப்ப நாயை பயன்படுத்தி சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை செய்யப்படும் எனத் தெரிகிறது.