நீலகிரி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

குன்னூரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.


குன்னூரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜுனன் தலைமை வகித்தார்.
அதிமுக மாவட்ட அவைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான சி. கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
அரசு லாலி மருத்துவமனைப் பகுதியில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட அதிமுகவினர் குன்னூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையை வந்தடைந்தனர். பின்னர், அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு, குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினரும், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளருமான சாந்தி ராமு, இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், நகரச் செயலாளர் டி.சரவணகுமார் ஆகியோர் உள்பட ஒன்றியச் செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
உதகையில்...
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் உதகையில் மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு உதகை நகரச் செயலர் எஸ்.ஜார்ஜ், நிர்வாகிகள் கே.ஏ.முஸ்தபா, கே.முத்துசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பந்தலூரில்...
பந்தலூர் பஜாரில் நடைபெற்ற விழாவுக்கு திமுக கிளைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
அண்ணாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில், அவைத் தலைவர் சுப்பையா, பிரதிநிதி அண்ணாமலை, நகர நிர்வாகி சிவசுப்பிரமணியம், நகர்மன்ற முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம், தொமுச தலைவர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com