நீலகிரி மாவட்டத்துக்கு 2019-2020ஆம் நிதியாண்டிற்கு ரூ.3,132 கோடி கடன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டிற்கான மாவட்ட கடன் திட்ட அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட, ரிசர்வ் வங்கியின் உதவிப் பொதுமேலாளர் சேதுராமன் பெற்றுக் கொண்டார்.
இதில், மாவட்டத்திற்கு முன்னுரிமைக் கடனாக ரூ.3.132 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூ. 2,250 கோடி, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு ரூ. 421 கோடி, பிற முன்னுரிமைக் கடன்களுக்கு ரூ. 461 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ. 2,838 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் நடப்பு ஆண்டில் கூடுதலாக ரூ. 295 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நபார்டு வங்கியின் மேலாளர் வசீகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, அனைத்து வங்கிகளின் மேலாளர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு!

அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
