நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள சரவணா மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சரவணா மலை பகுதியில் கடந்த 3 நாள்களாக ஆங்காங்கே காட்டு தீ ஏற்பட்டு வருகிறது. அடர்ந்த வனப் பகுதி என்பதால் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளது.
அதையடுத்து சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் வேதிப் பொருள்களை வனப் பகுதியில் தெளித்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.