பந்தலூரில் பெண்களுக்கான தலைமைப் பண்பு குறித்து பயிற்சி

பந்தலூரில் ஜூனியர் சேம்பர் அமைப்பு சார்பில் பெண்களுக்கான தலைமைப் பண்பை வளர்ப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பந்தலூரில் ஜூனியர் சேம்பர் அமைப்பு சார்பில் பெண்களுக்கான தலைமைப் பண்பை வளர்ப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
பந்தலூர் ஜூனியர் சேம்பர் அமைப்பு, பிரைட் பியூச்சர் கல்வி நிறுவனமும் இணைந்து யாராலும் சாதிக்க முடியும் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி முகாமில் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளை பெறுவது மற்றும் திட்டமிடுதல், மொழிப் புலமையை மேம்படுத்துதல், பொது அறிவை வளர்த்தல், வாழ்க்கைத் திறன் மேம்பாடு, தகவல் தொடர்பின் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பிரைட் பியூச்சர் கல்வி நிறுவனத்தின் இயக்குநர தனராஜ், ஜூனியர் சேம்பர் அமைப்பின் முன்னாள் தலைவர் ஷியாம் கண்ணன், ஆல்பா அகாதெமியின் நிர்வாகி ரஞ்சன் விக்னேஷ், தொழிற் சங்கத் தலைவர் ஜெபமாலை, மருத்துவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com