கூடலூரை அடுத்து உள்ள கோழிப்பாலம் பகுதியில் கோயில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள கோழிப்பாலம் குடியிருப்புப் பகுதியில் உள்ள அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலின் கதவு திறந்திருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் கூடலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.