கூடலூரை அடுத்துள்ள பிதர்க்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த மழைக்கு கூலி தொழிலாளியின் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் உள்ள பிதர்க்காடு பகுதியில் பெய்த மழைக்கு மூச்சிக்குன்னு பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி பாபு என்பவரது வீட்டின் பின்பகுதி இடிந்து சேதமடைந்தது.
எனவே, சேதமடைந்த வீட்டுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.