கூடலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் ரூ. 5.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்ட "லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல்' அமைப்பு சார்பில், தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட ஓவேலி, பார்வுட், சீபுரம், எல்லமலை பகுதி மக்கள், வனப்பகுதியிலுள்ள பழங்குடி மக்கள் உள்ளிட்ட 900 பேருக்கு கம்பளி, உணவுப் பொருள்கள் கூடலூர் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
கூடலூர் டிஎஸ்பி ஜெய்சிங் பயனாளிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் அரிமா சங்கச் செயலாளர் செவ்வேல், மண்டலத் தலைவர் ராஜேஷ், சட்ட ஆலோசகர்கள் ஜெயா ஜோசப், அப்சல் ஜா, உதகை, கூடலூர் பகுதி அரிமா சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.