நீலகிரி
முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி தாக்கி யானைக் குட்டி சாவு
முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி தாக்கி யானைக் குட்டி இறந்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி தாக்கி யானைக் குட்டி இறந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி வனச் சரகத்தில் உள்ள மன்றாடியார் வனப் பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மசினகுடி வனச் சரக அலுவலர் மாரியப்பன் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
அங்கு குட்டி யானை இறந்துகிடந்தது. இதையடுத்து மசினகுடி கால்நடை மருத்துவர் கோச்சலனை வரவழைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது.
இறந்த யானை பிறந்து ஆறு மாதமே ஆன ஆண் குட்டி யானை என்பதும் புலி தாக்கியதில் இறந்ததும் தெரியவந்துள்ளதாக வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து உதவி வனப் பாதுகாவலர் பெரியசாமி, சிங்காரா வனச் சரக அலுவலர் காந்தன் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுசெய்தனர்.