நெலாக்கோட்டை விலங்கூர் பகுதியில் கரடி நடமாட்டம்

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை விலங்கூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை விலங்கூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் உள்ள நெலாக்கோட்டை ஊராட்சியில் உள்ள விலங்கூர் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடியிருப்புப் பகுதிக்குள் கரடி நுழைந்து ரகளை செய்து வந்தது.
கடந்த வாரம் இரவு நேரத்தில் ஒரு வீட்டின் பின்புற சுவருக்கு கீழ் கரடி குழி தோண்டியுள்ளது. இந்நிலையில், அதே கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை நுழைந்த கரடி ஷாஜஹான் என்பவரது வீட்டு அருகே கரடி குழி தோண்டுவதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது, கரடி விரட்டியதால் பொதுமக்கள் வீட்டுக்குள் ஓடினர். இதையடுத்து, பாதுகாப்பு அளிக்க கோரி அப்பகுதி மக்கள் வனத் துறையிடம் கோரிக்கை வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com