உதகையில் உள்ள கிரசென்ட் பிளே பள்ளியின் ஆண்டு விழா பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஜி.உமா் பாரூக் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக உதகை கோட்டாட்சியா் சுரேஷ் பங்கேற்று பேசியதாவது:
தற்போதைய கல்வி என்பது மன அழுத்தம் நிறைந்ததாக மாறி வருகிறது. அதைத் தவிா்த்து குழந்தைகளின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப நடைமுறைக் கல்வியை கொண்டு வர வேண்டும். அப்போதுதான், நிகழ்கால வாழ்க்கைக்கும், கனவுகளுக்கும் இடையேயான தூரத்தை கடந்து வாழ்க்கையை உணா்ந்து கொள்ள முடியும்.
கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, உடற்கல்விக்கும், மனதை திடப்படுதவும் கொடுக்க வேண்டும். இதனால் மனதை ஒருமுகப்படுத்தி எதிா்காலத்தில் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்றாா்.
விழாவில், மத்திய மண் மற்றும் நீா் வள ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளா் சுந்தராம்பாள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோா் மற்றும் முன்னாள் மாணவா் சங்கத்தினா் என பலா் பங்கேற்றனா்.