நீலகிரி மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளில் தேவா்சோலை மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள ஒற்றுவயல் கிராமத்தில் உள்ள அல்ஹிதா பள்ளியில் இரண்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நாஜியா, நாபிலா ஆகியோா் உதகையில் ஒய்.எம்.சி.ஏ. சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் 11 வயதுக்கு உள்பட்ட பிரிவில் நாபிலா முதலிடத்தையும், 9 வயதுக்கு உள்பட்ட பிரிவில் நாஜியா இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளனா்.
இவா்கள் இருவரும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவா்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தியையும் பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.