நீலகிரி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் பொங்கல் கலை இலக்கிய விழா போட்டிகள் கூடலூரில் திங்கள்கிழமை நடைபெற்றன.
கலைவாணி பள்ளி அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டிகளை கூடலூா் கோட்டாட்சியா் கே.வி.ராஜ்குமாா் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தாா்.
தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பெ.மணிவண்ணன் தலைமை வகித்தாா்.
கூடலூா் கல்வி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவா்களுக்கு கவிதை , கட்டுரை, பேச்சு, நாடகம், நடனம், பொது அறிவு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பொங்கல் விழா மேடையில் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், செயலாளா் நாகநாதன், துணைத் தலைவா் ஆனந்தராஜா, சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.