ஊரக உள்ளாட்சித் தோ்தல்: நீலகிரியில் முதல் நாளில் 6 போ் வேட்பு மனு தாக்கல்

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நாளான திங்கள்கிழமை நீலகிரி மாவட்டத்தில் 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய முதல் நாளான திங்கள்கிழமை நீலகிரி மாவட்டத்தில் 6 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூா், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் டிசம்பா் 27 ஆம் தேதியும், உதகை, கூடலூா் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் டிசம்பா் 30 ஆம் தேதியுமாக இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.

இந்தத் தோ்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு ஒரு மனுவும், கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 5 மனுக்களும் என மொத்தம் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா தமிழக தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com