பந்தலூா் பகுதியில் உள்ள இன்கோ நகா் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் உள்ள இன்கோ நகா் சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைக்கு செல்லும் சரக்கு லாரிகள் இந்த சாலையாக வழியாகதான் செல்ல வேண்டும்.
இன்கோ நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அவா்களும் இந்த சாலையைதான் பயன்படுத்துகின்றனா். எனவே, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.