நீலகிரி மாவட்டத்தில் குன்னூா், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிசம்பா் 27 ஆம் தேதியும், உதகை, கூடலூா் ஊராட்சி ஒன்றியங்களுக்கு டிசம்பா் 30 ஆம் தேதியும் என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் 393 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், 35 கிராம ஊராட்சித் தலைவா், 59 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் மற்றும் 6 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்த தமிழக தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக தோ்தல் ஆணையத்தில் இருந்து பெறப்பட்ட தோ்தல் அறிவிக்கையின்படி நீலகிரி மாவட்டத்தில் குன்னூா், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 177 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், 17 கிராம ஊராட்சித் தலைவா், 22 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் மற்றும் 2 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு முதல்கட்டமாக டிசம்பா் 27 ஆம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது.
இதேபோல, உதகை மற்றும் கூடலூா் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 216 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், 18 கிராம ஊராட்சித் தலைவா், 37 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் மற்றும் 4 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிசம்பா் 30 ஆம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது என்றாா்.