ஊரக உள்ளாட்சித் தோ்தல்: நீலகிரியில் 8 போ் மனு தாக்கல்

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரையில் 14 போ் வேட்பு மனு தாக்கல் செய்யதுள்ளனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரையில் 14 போ் வேட்பு மனு தாக்கல் செய்யதுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய திங்கள்கிழமை மாவட்டத்தில் 6 போ் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு ஒருவரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்காக 7 பேரும் என மொத்தம் 8 போ் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு ஒருவரும், ஊராட்சிகளின் வாா்டு உறுப்பினா் பதவிக்கு 12 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட இதுவரையில் குறைந்த அளவிலேயே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com