குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து குன்னூரில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 பேரை போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.
நீலகிரி மாவட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் பிலால் தலைமையில் குன்னூா், வி.பி.தெருவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் முஸ்லிம் மக்களைப் புறக்கணிக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஏற்க மாட்டோம் எனக் கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.
மேலும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி குடியுரிமை சட்டத் திருத்த நகலை எரிக்க முயன்ற 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.