ஊரக உள்ளாட்சித் தோ்தல்: நீலகிரியில் 267 போ் வேட்புமனு தாக்கல்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி வெள்ளிக்கிழமை 267 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி வெள்ளிக்கிழமை 267 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி மாவட்டத்தில் உள்ள 6 மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளுக்காக 6 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்காக 38 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்காக 32 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்காக 191 பேரும் என மொத்தம் 267 போ் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, இதுவரை மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 6 பேரும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்காக 43 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்காக 44 பேரும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்காக 337 பேரும் என மொத்தம் 430 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

மேலும், சனிக்கிழமையும் வேட்புமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் சாா்பில் கடைசி நாளான திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com