வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் 25 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாண்டுகள் பணியாற்றி வருவோரும், இம்மாவட்டத்தை சொந்த மாவட்டமாகக் கொண்டோருமான காவல் துறை அதிகாரிகள் 25 பேர் இது வரையிலும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பணியிட மாற்றம் பெறுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் விவரம்...: உதகை நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமேனி, காவல் ஆய்வாளர்கள் விநாயகம், முரளி, சுரேஷ், பிரவீணா, பாலசுந்தரம், 14 காவல் உதவி ஆய்வாளர்கள், 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள்.