பக்காடாவில் கிராம சபைக் கூட்டம்

கீழ்கோத்தகிரி பக்காடா கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்  செவ்வாய்க் கிழமை நடந்தது.

கீழ்கோத்தகிரி பக்காடா கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்  செவ்வாய்க் கிழமை நடந்தது. 
ஊர் தலைவர் ரவி ஜெகநாதன் தலைமை வகித்தார். கோத்தகிரி வன அலுவலர் சசி , உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு பணிகள் குறித்தும், ஊராட்சியில் இதுவரை நடந்து முடிந்த பணிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். மேலும், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது. இதில், பக்காடா சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 245 பேர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com